இலங்கையில் ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பதவிக்கு புதிய அதிகாரி!
ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பதவியில் எம்.எஸ்.பீ. சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பதவி செப்டம்பர் 24 ஆம் திகதி முதல் வெற்றிடமாக உள்ளது.
இதன்படி, தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றும் எம்.எஸ்.பீ. சூரியப்பெரும, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பதவியில் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இலங்கை நிர்வாக சேவையில் விசேட தர அதிகாரியாவார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த இது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
(Visited 12 times, 1 visits today)





