ஆசியா செய்தி

இஸ்ரேலில் தாக்குதலில் 3 நாட்களில் 40க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பலி

லெபனானின் சுகாதார அமைச்சர் 40 க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் மூன்று நாட்களில் கொல்லப்பட்டனர் என தெரிவித்தார்.

கடந்த அக்டோபரில் ஹெஸ்பொல்லாவும் இஸ்ரேலும் மோதத் தொடங்கியதில் இருந்து ஒட்டுமொத்தமாக 97 பேர் கொல்லப்பட்டனர்.

சுகாதார அமைச்சர் பிராஸ் அபியாட் செய்தியாளர்களிடம் , மூன்று நாட்களில் “ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்களில் பணிபுரிபவர்களில்” 40 பேர் கொல்லப்பட்டனர்.

சண்டை தொடங்கியதில் இருந்து 97 “துணை மருத்துவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள்” கொல்லப்பட்டதாகவும் 188 பேர் காயமடைந்ததாக குறிப்பிட்டார்.

ஹெஸ்பொல்லா அல்லது பிற லெபனான் கட்சிகளுடன் இணைந்த அமைப்புகளில் உள்ள மீட்பவர்களும் இந்த எண்ணிக்கையில் அடங்குவர்.

மோதல்கள் தொடங்கியதில் இருந்து, 127 குழந்தைகள் உட்பட 1,974 பேர் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர், 9,350 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

இந்த வாரம், ஹெஸ்பொல்லாவின் கோட்டையான தெற்கு லெபனானின் சில பகுதிகளில் தனது துருப்புக்கள் தரைவழித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்தது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!