லெபனான் தாக்குதல் – பலி எண்ணிக்கை 492 ஆக உயர்வு

லெபனானில் ஹெஸ்பொல்லாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தீவிரமான மற்றும் பரந்த அளவிலான வான்வழித் தாக்குதல்களில் 492 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஹிஸ்புல்லா 200 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வடக்கு இஸ்ரேலுக்கு அனுப்பியதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இறந்தவர்களில் 35 குழந்தைகள் மற்றும் 58 பெண்கள் அடங்குவதாகவும், 1,645 பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் எத்தனை பேர் பொதுமக்கள் அல்லது போராளிகள் என்பதை அது தெரிவிக்கவில்லை.
தாக்குதல்களால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ஃபிராஸ் அபியாட் தெரிவித்தார்.
(Visited 19 times, 1 visits today)