உலகம்

நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்த ஜோர்தானியப் பிரதமர்

ஜோர்தானில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து ஒருவாரம்கூட முடிவடையாத வேளையில், பிரதமர் பிஷர் அல் கசாவ்னே பதவி விலகல் கடிதத்தை ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) சமர்ப்பித்ததாக விவரமறிந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாமன்னர் அப்துல்லாவின் அலுவலகத் தலைவரும் முன்னாள் திட்டமிடுதல் அமைச்சருமான ஜாஃபர் ஹசான், பிரதமராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கசாவ்னே, 2020 அக்டோபரில் பிரதமர் பதவியேற்றார்.

காஸா போர் காரணமாக ஜோர்தானின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள தாக்கத்தை மட்டுப்படுத்துவதில் நிலவும் சவால்களை ஹசான் எதிர்கொள்ள வேண்டும். முதலீடு செய்வதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளாலும் சுற்றுப்பயணத்துறை கண்ட வீழ்ச்சியாலும் ஜோர்தானின் பொருளியல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!