ரஷ்ய தாக்குதலில் உக்ரைனில் 3 செஞ்சிலுவைச் சங்கத் தொழிலாளர்கள் மரணம்

கிழக்கு உக்ரைனில் செஞ்சிலுவை சங்க வாகனங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
“டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மனிதாபிமான பணியின் வாகனங்களை தாக்கினர்” என்று வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், பிராந்தியத்தில் திட்டமிடப்பட்ட முன்னணி உதவி விநியோகத்தின் தளத்தை ஷெல் தாக்கியதில் அதன் ஊழியர்கள் மூன்று பேர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தினர்.
தாக்குதலுக்குப் பின்னால் இருந்தவர்கள் யார் என்று கூறவில்லை.
“செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் மீதான தாக்குதல்களை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்,” என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தலைவர் மிர்ஜானா ஸ்போல்ஜாரிக் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உதவி விநியோக தளத்தை ஷெல் தாக்குதல் தாக்கும் என்பது மனசாட்சிக்கு புறம்பானது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.