ஆசியா செய்தி

ஜப்பானில் நில நடுக்கம் ஏற்படும் என அச்சம் – அரிசி வாங்கி குவிக்கும் மக்கள்

ஜப்பானில் நில நடுக்கம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் அரிசியை அதிகமாக வாங்கிக் குவிப்பதாகக் கூறப்படுகிறது.

பீதியில் மக்கள் அவ்வாறு செய்வதாக கூறப்படுகின்றது. அந்தப் போக்கை நிறுத்தச் சொல்லி அரசாங்கம் எச்சரித்திருக்கிறது.

அரிசியே ஜப்பானியர்களின் அன்றாட உணவாகும். நெற்பயிர் விளைச்சலைப் பேரிடர்கள் பாதித்துப் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

விளைச்சல் நிலையாய் உள்ளதாக வேளாண்துறை அமைச்சர் டெட்சுஷி சக்கமோட்டோ (Tetsushi Sakamoto) தெரிவித்தார்.

பற்றாக்குறையைச் சமாளிக்க விவசாயிகள் ஒரு வாரத்திற்கு முன்கூட்டியே அறுவடை செய்யலாம் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

(Visited 28 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!