உகாண்டாவில் இடிந்து விழுந்த நிலப்பரப்பு தளம் : 18 பேர் பலி!

உகாண்டா தலைநகரில் உள்ள ஒரு பரந்த நிலப்பரப்புத் தளம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
கம்பாலாவின் பெரும்பகுதிக்கு கழிவுகளை அகற்றும் இடமாக விளங்கும் கிடீசி குப்பைக் கிடங்கு இடிந்து விழுந்துள்ளது.
இதில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 14 பேர் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுள் இரு குழந்தைகளும் உள்ளடங்குவர்.
கனமழை காரணமாக இந்த சரிவு ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
எவ்வாறாயினும் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
(Visited 15 times, 1 visits today)