ஐரோப்பா

பிரித்தானியாவில் சுப்பர் மார்க்கெட்களில் திருடும் பறவை – அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை

பிரித்தானியாவில் கடற்பறவை (Seagull) ஒன்றுக்கு அங்கு நுழைவதிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள சுப்பர் மார்க்கெட்களில் திருடும் கடற்பறவைக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

“Steven Seagull” என்று அழைக்கப்படும் பறவை கடந்த 6 ஆண்டாகக் கடையிலிருந்து உருளைக்கிழங்கு சிப்ஸைத் திருடுகிறது.

கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் ஸ்டீவன் சுமார் 30 சிப்ஸ் பொட்டலங்களுடன் பறந்துள்ளது. குறிப்பாக அதற்கு ‘ BBQ beef’ ரக சிப்ஸ் மிகவும் பிடிக்கும் என்று கடையின் மேலாளர் ஸ்டுவர்ட் ஹார்மர் (Stuart Harmer) கூறினார்.

சிப்ஸை எடுத்து ஸ்டீவன் கடைக்கு வெளியே அதன் நண்பர்களுடன் பகிர்ந்து உண்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வாடிக்கையாளர்களைக் கதவை மூடும்படி வலியுறுத்திக் கடையெங்கும் சுவரொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் கதவு மூடியிருந்தால் அதனைக் கடற்பறவை அலகால் தட்டுகிறது. காரமான சிப்ஸை வைத்து ஸ்டீவனை ஏமாற்றலாம் என்று எடுக்கப்பட்ட முயற்சியும் வீணானது.

என்ன செய்தாலும் ஸ்டீவன் அதற்குப் பிடித்த சிப்ஸை எடுத்தது. “கடற்பறவை காரணமாக சிப்ஸ் பொட்டலங்கள் சீக்கிரம் முடிந்துவிடுவதை எப்படி அதிகாரிகளிடம் புரியவைப்பது? நான் கேளிக்கையாகப் பேசுகிறேன் என்று அவர்கள் நினைக்கின்றனர்” என்று ஹார்மர் தெரிவித்துள்ளார்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!