பிரித்தானியாவில் M25 பாதையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!
பிரித்தானியாவில் அடுத்த நான்கு நாட்களில் பிரதான நெடுஞ்சாலைகள் தொடர்ச்சியாக மூடப்படுவதால், பம்பர்-டு-பம்பர் போக்குவரத்தை எதிர்பார்க்குமாறு சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
M25, M4 மற்றும் M1 இல் பயணிக்கும் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசைகளை எதிர்கொள்ள நேரிடும் என போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து மிகுந்த இந்த வழித்தடங்களைப் பயன்படுத்துவோர் இன்று முதல் ஜூலை 24 புதன்கிழமை வரை இரவு முழுவதும் மூடப்படுவதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு தேசிய நெடுஞ்சாலைகள் அறிவுறுத்தியுள்ளன.
(Visited 60 times, 1 visits today)





