இலங்கை

இலங்கையில் மூளைக்காய்ச்சல் பரவல்? காலி சிறைச்சாலையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை

காலி சிறைச்சாலையின் கைதிகளுக்கிடையே மூளைக்காய்ச்சல் நோய் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாமல் இருப்பதற்கும், உறவினர்களைச் சந்திப்பதற்கான அனுமதியை இடைநிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலி சிறைச்சாலையில், மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கைதியொருவர் உயிரிழந்தார்.

அத்துடன் மூளைக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் 3 கைதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அவர்கள் தற்போது காலி – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூளைக்காய்ச்சல் நோயினால் காலி – வந்துரம்ப பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவரே உயிரிழந்தார்.

போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

(Visited 52 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!