ஐரோப்பா

பிரித்தானியாவில் இன்று நாடாளுமன்ற தேர்தல் – மில்லியன் கணக்கானோர் வாக்களிக்க தகுதி

பிரித்தானியாவில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது.

மில்லியன் கணக்கானோர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். பிரித்தானியாவில் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்களிப்பு தொடங்கும்.

இரவு 10 மணிக்கு வாக்களிப்பு நிறைவடையும். வாக்காளர்கள் 650 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பர்.

அதிக இடங்களைப் பெறும் கட்சி ஆட்சி அமைக்கும். அந்தக் கட்சியின் தலைவர் பிரித்தானியாவில் பிரதமராகப் பொறுப்பேற்பார்.

தற்போதைய பிரதமர் ரிஷி சுனாக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி தேர்தலில் வெற்றிபெற வாய்ப்புக் குறைவு எனப் பரவலாகக் கருதப்படுகிறது.

கடந்த 14 ஆண்டாக அக்கட்சியின் 5 பிரதமர்கள் ஆட்சி நடத்தியுள்ளனர். கேயர் ஸ்டாமர் தலைமையிலான தொழிற்கட்சி இம்முறை தேர்தலில் வெற்றிபெறும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

(Visited 26 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்