கிரீஸில் இரண்டாவது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ : பயண எச்சரிக்கை புதுப்பிப்பு!

கிரீஸில் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கை இரண்டாவது நாளாக இன்றும் (02.07) முன்னெடுக்கப்படுகிறது.
இந்நிலையில் கிரீஸுக்குப் பயணிக்கும் மற்றும் அங்கிருந்து வரும் அனைவருக்கும் ஒரு முக்கியமான புதுப்பிப்பை ஜெட்2 பட்ஜெட் விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கிரீஸ் தீவான காஸ் தீவில் உள்ள கர்தமேனா பகுதி தற்போது கடுமையான காட்டுத்தீ காரணமாக எச்சரிக்கையாக உள்ளது.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏறபட்டுள்ளது.
நீடித்த வெப்பம் மற்றும் வறண்ட காலநிலை மற்றும் பலத்த காற்றுடன் இணைந்து காட்டுத்தீ ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது. கிரீஸ் வெப்பமான மாதங்களில் கடுமையான வானிலைக்கு பெயர் பெற்றது, எனவே பாதுகாப்பாக இருக்க, வழிகாட்டுதலை கவனமாக பின்பற்றுவது முக்கியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
(Visited 38 times, 1 visits today)