இலங்கை

இலங்கை தேசிய அடையாள அட்டை தொடர்பில் ஆட்கள் பதிவு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டையை (NIC) பெறாத 40 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் தங்களது தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்கள் பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.

இந்த வயதினருக்கு பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாததால் தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், அவர்கள் இப்போது தங்கள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க இந்த மாத இறுதி வரை அவகாசம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இதற்கான விண்ணப்பங்களை அனுப்ப மார்ச் 31ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பிரதேச செயலாளர்களின் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதற்கு கால அவகாசம் ஜூன் 30 வரை காலக்கெடுவை நீட்டிகப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி மேலும் தெரிவித்தார்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content