ஐரோப்பா

பிரித்தானியாவில் சாண்ட்விச் சாப்பிட்ட 200க்கும் அதிகமானோர் பாதிப்பு: வெளியான புதிய தகவல்

பிரித்தானியாவில், பல்பொருள் அங்காடிகள் பல, 60க்கும் மேற்பட்ட சாண்ட்விச் முதலான உணவுப்பொருட்களை திரும்பப்பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சாண்ட்விச்களில் பயன்படுத்தப்பட்ட லெட்டூஸ் இலைகள் (lettuce leaves), ஈ கோலை கிருமியின் தாக்கத்துக்குக் காரணமாக அமைந்திருக்ககூடும் என உணவு தரநிலை ஏஜன்சி (The Food Standards Agency – FSA) தெரிவித்துள்ளது.

தற்போது, சாண்ட்விச்களில் பயன்படுத்தப்பட்ட லெட்டூஸ் இலைகளிலிருந்துதான் இந்த ஈ கோலை கிருமி பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என கருதப்பட்டாலும், அதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாகும். ஏனென்றால், சாண்ட்விச்கள் தயாரானதுமே அவை விற்கப்பட்டுவிடுகின்றன, மக்கள் அவற்றை உண்டுவிடுகிறார்கள். ஆக, அந்த சாண்ட்விச்சிலிருந்த லெட்டூஸ் இலைகளிலிருந்துதான் கிருமி பரவியது என்பதை உறுதி செய்வது கடினம்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்..

(Visited 32 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்