சிரியாவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 07 பேர் பலி

வடமேற்கு சிரியாவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாடசாலைப் பயணத்தின் போது, குறித்த பேருந்து இட்லிப் நகரின் மேற்கே அயுன் அரா பகுதியில் சாலையை விட்டு விலகி ஒரோண்டஸ் ஆற்றில் விழுந்தது.
பேருந்து வீதியை விட்டு விலகிச் சென்றமைக்கான காரணம் என்ன என்பது இதுவரையில் வெளியாகவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
(Visited 35 times, 1 visits today)