இலங்கை செய்தி

புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு இலங்கையில் தடை – நிதி மற்றும் சொத்துகளும் முடக்கம்

பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட தமிழ் புலம்பெயர் உள்ளிட்ட 15 அமைப்புகள் மற்றும் 210 நபர்களின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்களை முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நேற்று (03) வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

15 பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புகள் மற்றும் அவர்களது 210 கூட்டாளிகளின் அனைத்து நிதிகள், பிற நிதி சொத்துக்கள் மற்றும் பொருளாதார ஆதாரங்கள் அனைத்தையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஐக்கிய நாடுகளின் கட்டளைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் விடுதலைப் புலிகள் அல்லது ஈழ விடுதலைப் புலிகள், தமிழர் புனர்வாழ்வு அமைப்பு அல்லது TRO, தேசிய தவ்தீஹ் ஜமாத் அல்லது NTJ, ஜமாதே மிலாத் இப்ராஹிம் அல்லது ஜேஎம்ஐ நிதிகள் மற்றும் சொத்துக்கள் உட்பட அனைத்து 15 அமைப்புகளும் முடக்கப்பட்டுள்ளன.

மேலும், பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 113 பேரின் அனைத்து பணம் மற்றும் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

(Visited 10 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை