இலங்கை செய்தி

யானைகளும் கலக்கமடைந்துள்ளன

ஒரே இடத்தில் இருந்து அதிகளவான யானைகளை காணக்கூடிய உலகின் தனித்துவமான பூங்காவாக விளங்கும் மின்னேரிய தேசிய பூங்காவில் தற்போது யானைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் சுற்றாடல் தணிக்கை பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூங்காவில் ஆக்கிரமிப்பு செடிகள் பரவியதால், பூங்காவில் உள்ள புல்வெளிகளின் பரப்பளவு குறைந்ததே இதற்கு முக்கிய காரணம் என்றும் தணிக்கையில் தெரியவந்துள்ளது.

மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டம் காரணமாக மின்னேரிய தேசிய பூங்காவில் வருடாந்தம் யானை கூட்டம் குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மொரகஹகந்த திட்டத்தினால் மின்னேரிய தேசிய பூங்காவிற்கு யானைகள் வருகை குறைந்துள்ளதாகவும் முன்னாள் வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெரும்பாலான யானைகள் செப்டம்பர் மாதத்தில் இந்த பூங்காவிற்கு வருகை தருகின்றன. ஆய்வின்படி, 2017ம் ஆண்டை விட, 2021ல் யானைகளின் வருகை 95 சதவீதம் குறைந்துள்ளது.

மின்னேரியா தேசிய பூங்காவில் 1160 ஹெக்டேர் புல்வெளிகள் உள்ளதாகவும், ஆக்கிரமிப்பு செடிகள் புல்வெளி முழுவதும் பரவியுள்ளதாகவும் கணக்காய்வு அறிக்கை கூறுகிறது.

இது புல் உண்ணும் விலங்குகளின் இருப்புக்கும், பூங்காவின் இருப்புக்கும் இடையூறாக இருக்கும் என்றும் தணிக்கையில் தெரியவந்துள்ளது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content