ஐரோப்பா

ஜெர்மனியில் கனமழை, பெருவெள்ளத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ள எல்லைதாண்டிய போக்குவரத்து

தெற்கு ஜெர்மனியிலும் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளிலும் பெய்த கனமழையால் போக்குவரத்துக்கும் தகவல் தொடர்புக்கும் பெருத்த இடையூறு ஏற்பட்டது. இடியுடன் கூடிய மழை வார இறுதியில் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து இடையூறுகள் தொடர்ந்தன.

இடையூறுகள் இன்றும் (ஜூன் 2) நீடித்ததால் பவேரியாவின் தலைநகரமான மியூனிக், சுவிட்சர்லாந்தின் ஸூரிக், ஆஸ்திரியாவின்பிரெகென்ஸ் ஆகியவற்றுக்கான எல்லைதாண்டிய ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக டச் பாஹ்ன் ரயில் போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெர்மனியின் கிழக்கு மாநிலங்களான துரிங்கியா, சேக்சொனி மற்றும் சேக்சொனி-அன்ஹால்ட் ஆகியன உட்பட கிட்டத்தட்ட நாட்டின் பாதி பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அப்பர் டான்யூப் ஆறு, ஜெர்மனியின் குறுக்கே கப்பல்கள் கடந்து செல்லக்கூடிய முக்கிய கடல்வழி ஆகும்.அந்த ஆற்றிலும் தென்பகுதியில் ஓடும் துணை ஆறுகளிலும் நீர்மட்டம் அதிகமாக அல்லது ஆக அதிகமாக உயரக்கூடிய அபாயம் இருப்பதாகவும் விழிப்புநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பெருவெள்ளம் காரணமாக ஆக்ஸ்பர்க் அருகே அணை ஒன்று உடைந்தது. அதேபோல, ஆக்ஸ்பர்க்கின் தென்மேற்கில் உள்ள பிஸ்சாக்கில் உள்ள வீடுகளில் சிக்கியிருந்த குடியிருப்பாளர்கள் ஹெலிகாப்டர் மூலம் வெளியேற்றப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் கூறின.

See also  பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து தலிபான்களை நீக்கும் ரஷ்யா!

பத்திரமாக வெளியேற்றப்ட்டவர்களுக்காக அவசரகால தங்குமிடங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் சனிக்கிழமை (ஜூன் 1) முதல் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

(Visited 10 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content