இலங்கை செய்தி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூவர் கைது

இந்தியா மற்றும் டுபாயில் இருந்து வந்த மூன்று பயணிகள் கட்டுநாயக்கவில் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளனர்.

வரி செலுத்தாமல், சுங்கத்திற்கு அறிவிக்காமல்  பொருட்களை கொண்டு வந்தமை குறித்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கட்டுநாயக்க விமான நிலையம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 111 வெளிநாட்டு மதுபான போத்தல்கள், சிகரெட்டுகள் மற்றும் பல இலத்திரனியல் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சந்தேகநபர்கள் கொழும்பு 13 மற்றும் மஸ்கெலியா பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 24 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை