இலங்கையில் அதிகரிக்கும் வெப்பத்தால் மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

இலங்கையில் மனநலம் கடுமையாக பாதிக்கப்படுவதாக மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வெப்பமான காலநிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நாட்களில் குடும்ப வன்முறைகளும் அதிகரித்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்வி மனநல கற்கைகள் பிரிவின் தலைவர் சிந்தக சந்திரகுமார தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தநிலை மன ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 14 times, 1 visits today)