இலங்கை

ராஜபக்ஷக்களின் இறுதித் தேர்தல்? ரணிலுக்கு காத்திருக்கும் நெருக்கடி

இது ராஜபக்ஷக்களின் இறுதித் தேர்தலாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் இதனை தெரிவித்துள்ளார்.

சமகால நிலைமை தொடர்பாக யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்?

பசில் ராஜபக்ஷவை வரவேற்பதற்காக அனைவரும் விமான நிலையம் சென்றுள்ளனர். தமது அரசாங்கம் தோல்வியுற்றதை அறிந்து, நாட்டை விட்டு ஓடியவர் இந்த பசில் ராஜபக்ச.

இவர்கள் வருகையால் எமது நாட்டுக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. எமது நாட்டினை நாசமாக்கியவர்கள்.இதை நான் கூறவில்லை உயர் நீதிமன்றம் கூறியது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச குடும்பமே காரணம்.

இது ராஜபக்சாகளின் இறுதித் தேர்தல் ஆக இருக்கலாம். மேலும் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் இறுதி தேர்தல் மட்டுமல்ல சாவு மணியும் கூட. இவர்கள் எதிர்காலத்தில் மக்களால் விரட்டி அடிக்கப்படுவார்கள்.

இவர்கள் எமது நாட்டில் இனவாதத்தைத் தூண்டி கடன் பொறிக்குள் தள்ளியுள்ளனர். அரசியலில் இருந்து விரட்டி அடிக்கப்பட வேண்டிய இவர்களுக்கு எமது மக்கள் இனிவரும் தேர்தலில் நல்ல பாடம் புகட்டுவார்கள். அதனை தேசிய மக்கள் சக்தி செய்யும்” இவ்வாறு இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

(Visited 17 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!