ஐரோப்பா

இங்கிலாந்தில் வீடொன்றில் சடலமாகக் மீட்கப்பட்ட சீக்கிய பெண்! – வெளியான விபரங்கள்

இங்கிலாந்திலுள்ள வீடு ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சீக்கிய பெண்ணின் பெயர் முதலான விவரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

கடந்த மாதம், அதாவது, பிப்ரவரி மாதம் 23ஆம் திகதி, காலை 6.00 மணியளவில், இங்கிலாந்தின், Beaconsfield என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு பொலிஸார் அழைக்கப்பட்டார்கள்.

அப்போது, அந்த வீட்டில் பெண்ணொருவர் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். தற்போது, அந்தப் பெண்ணின் பெயர் பரம்ஜித் கோஷல் கில் (40) என பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

அத்துடன், பரம்ஜித்தின் கணவரான பால் கில் (39) கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர், ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி, ரெடிங் கிரௌன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருக்கிறார்.

(Visited 24 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!