இந்தியா

கர்நடாகாவில் குழந்தையைப் பெற்றெடுத்த 9ம் வகுப்பு மாணவி: காரணமானவரை வலைவீசி தேடும் பொலிஸார்!

தும்கூரில் சமூக நலத்துறை விடுதியில் 9ம் வகுப்பு படித்து வந்த மாணவி கர்ப்பமாகி குழந்தை பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், தும்கூர் மாவட்டம், மதுகிரி சமூக நலத்துறை விடுதியில் 14 வயதுடைய மாணவி 9-ம் வகுப்பு படித்து வந்தார். பாகேபல்லி தாலுகாவில் உள்ள கண்ணம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அந்த மாணவி, விடுதியில் தங்கிப் படித்து வந்தார். இந்த நிலையில், அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவரது தாய்க்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து விடுதிக்கு வந்த மாணவி, தனது மகளை பாகேபள்ளியில் உள்ள பொதுமருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்த போது அவரர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதைக் கேட்டு அவரது தாய் அதிர்ச்சியடைந்தார். இந்த நிலையில், அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது.

சுமார் 2.2 கிலோ எடை கொண்ட அந்தக் குழந்தை, மேல் சிகிச்சைக்காக சிக்கபள்ளாப்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பாகேபல்லி காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், சிறுமியிடம் விசாரணை நடத்தினர். பயம் காரணமாக தனக்கு ஏற்பட்ட பிரச்சினையை மாணவி மறைத்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றவாளி குறித்து பொலிஸார், விடுதியில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தும்கூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!