செய்தி

டெக்சாஸில் காரில் தனியாக இருந்த சிறுமி மரணம் – தாய் கைது

டெக்சாஸில் கடுமையான வெப்பம் காரணமாக காரில் விட்டு செல்லப்பட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவின் Galena பூங்காவில், காலையில் வேலைக்குச் செல்வதற்கு முன்பு, 9 வயது சிறுமியை அவரது தாயார் காரின் பின் இருக்கையில் விட்டுச் சென்றுள்ளார்.

அந்தத் தாய் சிறுமிக்கு உணவு மற்றும் தண்ணீரை வழங்கி, ஜன்னலை பாதி திறந்து வைத்திருந்தார்.

அன்று பிற்பகல் வெப்பநிலை 36பாகையாக உயர்ந்ததாக ஹாரிஸ் கவுண்டி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மதியம் வந்தபோது அவரது தாயார் மயங்கிய நிலையில் காணப்பாட்ட சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் அவர் மீது வழக்குத் தொடரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி