இந்தியா

இந்தியாவில் லொரி மீது சரக்கு வாகனம் மோதியதில் 9 பெண்கள்,4 குழந்தைகள் பலி

சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூர் அருகே நடந்த சாலை விபத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 30 பேருக்கும் மேலானோர் காயமடைந்தனர்.

சட்டவுட் கிராமத்தைச் சேர்ந்த 50 பேருக்கும் மேற்பட்டோர் பனார்சி என்ற கிராமத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டு, திங்கட்கிழமை (மே 12) அதிகாலை 2 மணியளவில் சிறிய ரக லாரியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே வேகமாக வந்த சரக்கு வாகனத்துடன் மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர். அதில் 9 பெண்கள், 2 சிறுமிகள், 1 சிறுவன், 6 மாதக் குழந்தை ஆகியோர் அடங்குவர்.

காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு கரௌரா சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பலத்த காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக ராய்ப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

காவலர்களும் உள்ளூர்வாசிகளும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பல பயணிகள் சேதமடைந்த வாகனத்துக்குள் சிக்கியிருந்ததால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கௌரவ் சிங் கூறுகையில், “மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,” என்று தெரிவித்தார்.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே