இலங்கை செய்தி

இலங்கை – சீனா இடையே 9 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 9 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இலங்கை பிரதமர் சீனாவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் இந்த ஒப்பந்தகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும் என சீனப் பிரதமர் லீ கியான் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் உறுதியளித்துள்ளனர்.

அத்துடன், இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு உறுதுணையாக இருக்கும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரம் ஆகியவற்றின் அபிவிருத்திக்கு தமது நாடு ஆதரவளிக்கும் என சீன பிரதமர் லீ கியான் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 11 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!