சட்டவிரோதமாக ஐரோப்பா செல்ல முயற்சித்த 89 பேர் பலி

சட்டவிரோதமாக குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற படகு ஆப்ரிக்காவிற்கு சொந்தமான மொரிட்டானியா கடலில் மூழ்கியதில் 89 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் குழு கடந்த 1ஆம் திகதி ஐரோப்பா நோக்கி பயணித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
படகு மூழ்கியதையடுத்து, கடலில் மிதந்த 09 பேரை மீட்க மொரிட்டானிய கடலோர காவல்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மீட்கப்பட்டவர்களில் ஐந்து வயது சிறுமியும் அடங்குவதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன
(Visited 19 times, 1 visits today)