அசாமில் தேயிலைத் தோட்டத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

அஸ்ஸாமின் திப்ருகார் மாவட்டத்தில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் எட்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நம்ரூப் காவல் நிலையப் பகுதியில் உள்ள கச்சாரி பதரில் உள்ள ஒரு சிறிய தேயிலைத் தோட்டத்தில், சிறுமி விறகு சேகரிக்க வெளியே சென்றிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
“குற்றம் சாட்டப்பட்டவர் அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, சிறுமியை தனியாகப் பார்த்தார். அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது, பெரும்பாலும் மூச்சுத் திணறச் செய்து கொலை செய்திருக்கலாம்,” என்று ஒரு அதிகாரி தெரிவித்துள்ளனர்.
“சிறுமி வீடு திரும்பாததால், அவளுடைய பெற்றோர் மற்றும் அண்டை வீட்டார் அவளைத் தேடத் தொடங்கினர். அவர்கள் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இரவு 8.40 மணியளவில் உடல் கண்டெடுக்கப்பட்டது,”.
குற்றம் சாட்டப்பட்டவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓட முயன்றபோது உள்ளூர்வாசிகள் அவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் தனது தாயைக் கொன்று 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.