இலங்கை செய்தி

வவுனியாவில் 8 வயதுசிறுவன் பலி!

வவுனியாவில் எட்டுவயது சிறுவன் ஒருவர் கிணற்றினுள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (16) இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா கள்ளிக்குளம் பகுதியை சேர்ந்த க.டிலக்சன் என்ற எட்டுவயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன் நேற்றையதினம் கிணற்றுப்பகுதிக்கு சென்று தண்ணீர் அள்ள முற்பட்ட போது தவறி கிணற்றின் உள்ளே வீழ்ந்துள்ளார்.

இதையடுத்து, உறவினர்களால் சிறுவன் மீட்கப்பட்ட போதும் அவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பாக ஓமந்தை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!