ராஜஸ்தானில் குளிக்கச் சென்ற 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் உள்ள பனாஸ் ஆற்றில் எட்டு பேர் மூழ்கி இறந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் மூன்று பேர் மீட்கப்பட்டு, அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக டோங்க் காவல் கண்காணிப்பாளர் விகாஸ் சங்வான் தெரிவித்தார்.
25 முதல் 30 வயதுக்குட்பட்ட 11 பேர் கொண்ட குழு, குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியபோது, அவர்கள் ஆழமான நீரில் தவறி விழுந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
“அவர்களை மீட்டு எடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர்களில் எட்டு பேர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்”
இறந்தவர் ஜெய்ப்பூரிலிருந்து சுற்றுலாவிற்கு வந்தவர் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)