இலங்கை

இலங்கை முழுவதும் 762 சுற்றிவளைப்புகள் – 19 பெண்கள் உட்பட நூற்று கணக்கானோர் கைது

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ் நேற்று 762 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்தச் சுற்றிவளைப்புகளில் 742 ஆண்களும் 19 பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 18 சந்தேக நபர்களை தடுத்து வைக்க உத்தரவிடப்படவுள்ளதுடன், ஒரு சந்தேக நபர் சொத்து விசாரணைக்காகவும், 10 சந்தேகநபர்கள் புனர்வாழ்விற்காகவும் அனுப்பப்படவுள்ளனர்.

இந்த நடவடிக்கையில், மேல் மாகாணத்தில் மாத்திரம் 536 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், கஞ்சா, ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!