ஐரோப்பா

பிரித்தானியாவில் 72 உயிர்களை பலிகொண்ட தீ விபத்து : அதிகாரத்தில் இருந்தவர்களின் மெத்தனமே காரணம்!

பிரித்தானியாவில் 72 உயிர்களைக் கொன்ற கிரென்ஃபெல் டவர் தீ, அதிகாரத்தில் இருந்தவர்களின் “பத்தாண்டுகளின் தோல்வியின்” விளைவு என்று பொது விசாரணை கண்டறிந்துள்ளது.

விசாரணையின் இறுதி அறிக்கையில், அரசாங்கத்தின் மெத்தனம் மற்றும் தொழில்துறை நேர்மையின்மை மற்றும் பேராசை ஆகியவை 2017 சோகத்திற்கு எப்படி இட்டுச் சென்றது என்பது தெளிவாக எடுத்துறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமான உற்பத்தியாளர்கள் “முறையான நேர்மையின்மை” குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டனர், நிறுவனங்கள் அதன் உறைப்பூச்சு தயாரிப்புகளின் ஆபத்துகள் பற்றிய தகவல்களை “வேண்டுமென்றே மறைத்துவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விசாரணையின் தலைவர் சர் மார்ட்டின் மூர்-பிக் எளிமையான உண்மை என்னவென்றால், நிகழ்ந்த மரணங்கள் அனைத்தும் தவிர்க்கக்கூடியவை என தெரிவித்துள்ளார்.

நீண்டகால விசாரணையின் இரண்டாவது மற்றும் இறுதி அறிக்கை 1,700 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 12 நிமிடங்களில் சமையலறையில் ஏற்பட்ட தீ 19 மாடிகளுக்கு பரவக்கூடிய நிலையில் கோபுரத் தொகுதி எவ்வாறு உருவானது என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது.

(Visited 65 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்