இந்தியா செய்தி

குஜராத்தில் கார் விபத்தில் 4 கல்லூரி மாணவர்கள் உட்பட 7 பேர் பலி

தேர்வெழுத ஒரு கிராமத்திற்குச் சென்ற நான்கு கல்லூரி மாணவர்கள் உட்பட ஏழு பேர் குஜராத்தின் ஜுனாகத் மாவட்டத்தில் வாகன விபத்தில் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஜுனாகத்-வெராவல் நெடுஞ்சாலையில் ஒரு கார் திர்திசையில் இருந்து வந்த மற்றொரு கார் மீது மோதியதில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் தினேஷ் கோடியத்தார் தெரிவித்தார்.

“அதிக வேகத்தால் கார் சாலையை விட்டு விலகி எதிர் திசையில் வந்த மற்றொரு கார் மீது மோதியது. இரண்டு கார்களிலும் இருந்த ஏழு பயணிகளும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்” என்று அதிகாரி தெரிவித்தார்.

நான்கு கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேரும், மற்றொரு காரில் இரண்டு பயணிகளும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

காடு கிராமத்தை நோக்கிச் சென்ற காரில் பயணித்த ஐந்து பயணிகள் 60 வயது ஓட்டுநர் வஜு ரத்தோட் மற்றும் நான்கு மாணவர்களான விக்ரம் குவாடியா, தரம் தர்தேவ், அக்ஷத் தவே மற்றும் ஓம் முக்ரா என அடையாளம் காணப்பட்டனர்.

மற்றொரு காரில் பயணித்தவர்கள் 40 வயது ராஜு குதன் மற்றும் 35 வயது வினு வாலா என அடையாளம் காணப்பட்டனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!