இந்தியா விளையாட்டு

7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடையேயான போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

குர்பாஸ் மற்றும் ஆண்ட்ரெ ரசல் அதிரடி காரணமாக கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 179 ரன்களை குவித்தது. பின் 180 ரன்களை துரத்திய குஜராத் டைட்டனஸ் அணியின் துவக்க வீரராக களமிறங்கிய சாஹா 10 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.

இவரைத் தொடர்ந்து மூன்றாவது வீரராக களமிறங்கிய குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 20 பந்துகளில் 26 ரன்களை குவித்தார்.

மற்றொரு வீரரான சுப்மன் கில் 49 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். 11-வது ஒவரில் மூன்று விக்கெட்களை இழந்து தடுமாறியது குஜராத் டைட்டனஸ்.

பின் களமிறங்கிய டேவிட் மில்லர் மற்றும் விஜய் சங்கர் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அரைசதம் அடித்து அசத்திய விஜய் சங்கர் 51 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

(Visited 16 times, 1 visits today)

KP

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே