இந்தியா

சத்தீஸ்கர் மாவட்டங்களில் சரண்டைந்த 66 நக்சலைட்டுகள் ; 49 பேருக்கு மொத்தம் 2.27 கோடி பரிசு

சத்​தீஸ்​கர் மாநிலத்​தில் பாது​காப்பு படை​யினர் மேற்​கொண்ட தீவிர சோதனையைத் தொடர்ந்​து, ஐந்து மாவட்​டங்​களில் வியாழக்கிழமை (ஜூலை 24) 66 நக்​சலைட்​கள் பாது​காப்பு படை​யினர் முன்​னிலை​யில் சரணடைந்​தனர்.

சரணடைந்​தவர்களில் 49 பேர் பற்றித் தகவல் தெரி​விப்​போருக்கு ரூ.2.27 கோடி பரிசு அறிவிக்​கப்​பட்​டிருந்​தது குறிப்​பிடத்​தக்​கது.

சத்​தீஸ்​கரின் பிஜப்​பூர் மாவட்​டத்​தில் 25 நக்​சலைட்​களும், தண்​டே​வாடா மாவட்​டத்​தில் 15 நக்​சலைட்​களும், கன்​கெர் மாவட்​டத்​தில் 13 பேரும், நாராயண்​பூர் மாவட்​டத்​தில் 8 பேரும், சுக்மா மாவட்​டத்​தில் 5 பேரும் பாது​காப்பு படை​யினர் முன் சரணடைந்தனர். இவர்​களில் 27 பேர் பெண்​கள் ஆவர்.

சரணடைந்​தவர்களுக்கு மாநில அரசின் நக்​சலைட் மறு​வாழ்வு உதவி திட்​டத்​தின் கீழ் தலா ரூ.50,000 உதவித் தொகை வழங்​கப்​பட்​டது.

நக்​சலைட்​களின் மறுவாழ்வுக்காகச் சத்தீஸ்கர் அரசு ‘உங்​கள் நல்ல கிராமம்’ என்ற திட்டத்தைத் தொடங்கி, தொலை​தூர கிராமங்​களில் வளர்ச்சிப் பணிகளைச் செய்து வரு​கிறது.இத்​திட்​ட​மும், பஸ்​தர் காவல்துறையினர் தொடங்​கி​யுள்ள மறு​வாழ்வு திட்​ட​மும் தங்​களை மிக​வும் கவர்ந்துள்ளதாகச் சரணடைந்த நக்சலைட்கள் தெரி​வித்​துள்ளனர்.

சத்​தீஸ்​கர் மாநிலத்​தில் நக்​சலைட்​களை முற்​றி​லும் ஒழிக்க மத்​திய அரசு கடந்த சில ஆண்டுகளாகத் தீவிர நடவடிக்கை எடுத்​து வருகிறது.அதற்காக மத்​திய ஆயுதப்​படை மற்​றும் மாநிலக் காவல்துறை சிறப்புப் படைகள் உரு​வாக்​கப்​பட்​டன. இவர்களு​டன் துணை ராணுவப்​படை​யினரும், விமானப்​படை ஹெலி​காப்​டர் உதவி​யுடன் தீவிர தேடுல் வேட்​டை​யில் ஈடு​பட்டு வருகின்றனர்.

பாது​காப்பு படை​யினரின் அதிரடி நடவடிக்​கை​யால், நக்​சல் அமைப்​பின் முக்​கியத் தலை​வர்​கள் தேடுல் வேட்​டை​யில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். இதனால் இதர நக்​சலைட்​கள் பாது​காப்பு படை​யினர் முன்​னிலை​யில் சரணடைந்து வரு​கின்​றனர்.

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
Skip to content