இலங்கையில் இணையவழி நிதி மோசடி தொடர்பில் இந்தியர்கள் உட்பட 60 சந்தேகநபர்கள் கைது
நீர்கொழும்பில் பல பகுதிகளில் இருந்து இணைய நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் அறுபது (60) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 இந்திய பிரஜைகள் உட்பட சந்தேக நபர்கள் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நீர்கொழும்பில் உள்ள தலங்கம, மடிவெல மற்றும் கொச்சிக்கடை பகுதிகளில் இருந்து செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.





