இந்தியா செய்தி

அந்தமான் கடல் பகுதியில் 6 டன் போதைப் பொருட்கள் பறிமுதல்

அந்தமான் கடற்பகுதியில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் அந்தமான் கடற்பகுதியில் இந்திய கடற்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் மீன்பிடி படகு ஒன்றில், போதைப்பொருட்கள் கடத்தி செல்வதை கண்டுபிடித்தனர்.

அந்த மீன் பிடி படகை சுற்றி வளைத்த, கடற்படையினர் படகில் சோதனை செய்தனர். 3 ஆயிரம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 6 டன் எடை கொண்ட போதைப்பொருட்களையும் இந்திய கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

இந்திய கடற்படை பறிமுதல் செய்த போதைப்பொருட்களில் இதுவே மிக அதிகபட்சம் என தகவல் வெளியாகியுள்ளது.

“பறிமுதல் செய்யப்பட்டுள்ள 6 டன் போதைப்பொருட்களும் இந்தியா மற்றும் இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு விற்பனை செய்யப்படுவதற்காக கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த கடத்தலில் ஈடுபட்ட மியான்மர் நாட்டை சேர்ந்த 6 பேரை கைதுசெய்துள்ளோம். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

(Visited 52 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி