இந்தியா செய்தி

கர்நாடகாவில் குழந்தையை காப்பாற்ற முயன்ற 6 பேர் மரணம்

கர்நாடக மாநிலம், உத்தரகனடா மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த 6 பேரும், ஹூப்ளி நகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

விடுமுறையை கொண்டாட, உத்தர கனடா மாவட்டத்தின் கார்வார் நகரில் உள்ள தண்டேலியின் காளி ஆற்றில் குளித்தபோது விபரீதம் ஏற்பட்டுள்ளது.

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு குழந்தையை காப்பாற்ற முயன்றபோது, ஒருவர் பின் ஒருவராக நீரில் அடித்து செல்லப்பட்டு 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த 6 பேரில் 4 பேர் சிறுவர்கள் என தெரியவந்துள்ளது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

(Visited 24 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!