உலகம் செய்தி

துருக்கியில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு

துருக்கியின் மேற்கு பாலிகேசிர்(Balikesir) மாகாணத்தின் சிண்டிர்கி(Sindirki) மாவட்டத்தில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக பேரிடர் மற்றும் அவசர மேலாண்மை ஆணையம் (AFAD) தெரிவித்துள்ளது.

இஸ்தான்புல்(Istanbul) மற்றும் அருகிலுள்ள மாகாணங்களான புர்சா(Bursa), மனிசா(Manisa), இஸ்மிர்(Izmir) ஆகிய இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக ஹபர்துர்க்(Haberturk) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக ஆகஸ்ட் மாதம் சிண்டிர்கியில்(Sindirki) 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, அதில் ஒருவர் உயிரிழந்தார்.

2023ம் ஆண்டு , துருக்கியில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 53,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுவரை நாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவு இதுவாகும்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!