இலங்கை செய்தி

காலி சிறைச்சாலையில் கைதிகள் அறையில் இருந்து 52 தொலைபேசிகள் கண்டுபிடிப்பு

காலி சிறைச்சாலையின் இரண்டு கைதிகளின் அறைகளில் இருந்து 52 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சார்ஜர்கள், டேட்டா கேபிள்கள் உள்ளிட்ட பல பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காலி சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறைச்சாலைப் புலனாய்வுப் பிரிவின் அவசர பதில் தந்திரோபாயப் பிரிவினரால் நடாத்தப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே மேற்குறிப்பிட்ட உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

காலி சிறைச்சாலை வளாகத்தின் இரண்டு கட்டிடங்களில் அதிகாரிகள் இந்த விசேட தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளுக்குப் பயன்படுத்தப்படும் பல உபகரணங்களின் கையிருப்பு அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கண்டுபிடிக்கப்பட்ட கைத்தொலைபேசிகளில் ஸ்மார்ட் போன்களும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கையடக்க தொலைபேசிகள் மற்றும் சாதனங்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு சிறைச்சாலை தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 18 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை