இலங்கை

500 கோடி ரூபா மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது

500 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் – கலென்பிந்துனுவௌ பகுதியைச் சேர்ந்த மக்களிடம் பிரமிட் வகை வரத்தகத்தின் ஊடாக இவ்வாறு மோசடியில் ஈடுப்பட்டுளளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் மூன்று வருடங்களாக தலைமறைவாகியிருந்த குறித்த சந்தேகநபர் கண்டி – பிலிமத்தலாவ பகுதியிலுள்ள விடுதியொன்றில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்து விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரவித்துள்ளது.

39 வயதுடைய குறித்த சந்தேக நபர் மோசடியாக பெற்ற பணத்தில் கலென்பிந்துனுவௌ, அனுராதபுரம், கடவத்தை மற்றும் மாத்தளை ஆகிய பகுதிகளில் காணி மற்றும் வீடுகளை கொள்வனவு செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் ஒரு பட்டதாரி ஆசிரியராக கடமையாற்றியவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content