ஐரோப்பா

பிரான்ஸிலிருந்து பிரித்தானியா நோக்கி பயணிக்க முற்பட்ட 5 அகதிகள் மரணம்

பிரான்ஸில் இருந்து பிரித்தானியா நோக்கி பயணிக்க முற்பட்ட 5 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சனிக்கிழமை இரவு பா-து-கலே – Wimereux கடற்பகுதியில் இருந்து அகதிகள் சிலர் சிறிய படகு மூலம் பிரித்தானியா நோக்கி பயணிக்க முற்பட்டனர். சிறிய தூரம் பயணப்பட்ட நிலையில், பயணத்தை தொடரமுடியாத நிலை ஏற்பட்டது.

அதிகாலை 2 மணி அளவில் படகு மூழ்க ஆரம்பித்துள்ளது. மீட்புப்பணி அழைக்கப்படுவதற்குள் நிலமை கைமீறிச்சென்றுள்ளது.

Abeille Normandie கடற்படையினர் தலையிட்டு மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அவர்கள் தெரிவிக்கையில், நான்கு அகதிகள் பலியாகியுள்ளதாகவும், ஒருவர் உயிருக்காபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பின்னர் அவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

முன்னதாக, டிசம்பர் 15 ஆம் திகதி இடம்பெற்ற இதேபோன்ற ஒரு பயணத்தில் இரு அகதிகள் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content