இலங்கை

5 புதிய இலங்கை தூதுவர்கள் ஜனாதிபதியினால் நியமனம்

இலங்கையின் இராஜதந்திர சேவையில் பணியாற்றுவதற்காக உயர்ஸ்தானிகர் ஒருவரையும் நான்கு தூதுவர்களையும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நியமித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (07) இடம்பெற்ற உத்தியோகபூர்வ வைபவத்தின் போது ஜனாதிபதியினால் உத்தியோகபூர்வ நியமனங்கள் வழங்கப்பட்டன.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள் நியமனங்களை தொடர்ந்து ஜனாதிபதியுடன் சுருக்கமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

இதன்படி, கட்டாருக்கான தூதுவராக ஆர்.எஸ்.கான் அசாத்தும் ரஷ்யாவுக்கான தூதுவராக எஸ்.கே.குணசேகரவும், குவைத்துக்கான தூதுவராக எல்.பி.ரத்நாயக்கவும் எகிப்துக்கான தூதுவராக ஏ.எஸ்.கே.செனவிரத்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், நியூசிலாந்துக்கான உயர்ஸ்தானிகராக டபிள்யூ.ஜீ.எஸ். பிரசன்ன நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!