இலங்கை செய்தி

தங்கம் இறக்குமதி செய்யும் 5 நிறுவனங்களுக்கு கோடி கணக்கில் அபராதம்

சட்டவிரோதமான முறையில் தங்கத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்த பல நிறுவனங்களுக்கு 1243 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் தங்கத்தை இறக்குமதி செய்த 5 நிறுவனங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவற்றில் ஒன்றிற்கு 179 மில்லியன் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவிக்கின்றார்.

தங்கம் இறக்குமதி செய்யும் அனைத்து உரிமம் பெற்ற நிறுவனங்களும் இந்த சட்டவிரோத நடைமுறைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும், தங்கத்தை நேரடியாக இறக்குமதி செய்யாமல், மூன்றாம் தரப்பினரிடம் இருந்து வாங்கப்படும் தங்கத்திற்கு, உற்பத்தி அறிக்கைகளை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அபராதம் விதிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

நாட்டில் தங்கம் கடத்தலை தடுக்கும் நோக்கில், கடந்த மார்ச் மாதம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பேரில், சட்டவிரோதமான முறையில் தங்கம் இறக்குமதி செய்வது தொடர்பான சம்பவங்களை கருத்திற்கொண்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!