இந்தியா செய்தி

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 49 வயது சீன நாட்டவர் கைது

உத்தரபிரதேசத்தின்(Uttar Pradesh) பஹ்ரைச்(Bahraich) மாவட்டத்தில் உள்ள இந்தியா-நேபாள எல்லையில் உள்ள ருபைதிஹா(Rupaidiha) சோதனைச் சாவடியில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து எல்லைப் பகுதியை வீடியோ எடுத்ததாகக் கூறப்படும் 49 வயது சீனக் குடிமகனை சஷாஸ்திர சீமா பால் (SSB) காவல்துறை படை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட சீன நாட்டவர் சீனாவின் ஹுனான்(Hunan) மாகாணத்தைச் சேர்ந்த லியு குன்ஜிங்(Liu Qunjing) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவுக்குள் நுழைவதற்கு அவரிடம் செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவரிடமிருந்து மூன்று தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, அவற்றில் ஒன்றில் இந்தியப் பிரதேசத்தில் உள்ள பல முக்கியமான இடங்களின் வீடியோக்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சீன நாட்டவர் மீது வெளிநாட்டினர் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!