இந்தியா

உத்தரகாண்டில் பனிச்சரிவில் சிக்கிய 47 தொழிலாளர்கள்!

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்திற்கு உட்பட்ட பத்ரிநாத் பகுதியில் மனா கிராமத்தில், எல்லை சாலைகள் அமைப்பை (பி.ஆர்.ஓ.) சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் சிலர் அந்த பகுதியில் திடீரென ஏற்பட்ட பெரிய பனிச்சரிவு சிக்கியுள்ளனர்.

இதில் 57 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.

அவர்களில் 10 பேர் மீட்கப்பட்டு விட்டனர். பின்னர் அவர்கள், மனா பகுதியருகே உள்ள ராணுவ முகாமுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் பலருடைய நிலைமை மோசமடைந்து உள்ளது. மீதமுள்ள 47 தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர்.

அவர்களை மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபற்றி முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி கூறும்போது, இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு மற்றும் ராணுவ வீரர்கள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார். 3 முதல் 4 ஆம்புலன்சுகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

எனினும், கடுமையான பனிப்பொழிவால் மீட்பு பணிக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த பகுதியில் 28-ந்தேதி (இன்று) பனிச்சரிவு ஏற்படும் என லஹால் மற்றும் ஸ்பிடி போலீசார் சார்பில் நேற்றே எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.

அதனால் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் பாதுகாப்பான வழியை பயன்படுத்தும்படியும், கூடிய வரை பயணங்களை கட்டுப்படுத்தும்படியும் அறிவுறுத்தி இருந்தனர்.

(Visited 3 times, 3 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே