இலங்கையில் 460 சீனர்கள் கைது

தற்காலிக விசாக்களில் இங்கு வந்து தங்கி நிற்கும் சீனர்கள் 460 பேர் கடந்த சில தினங்களாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறு சிறு குழுவினராக வீடுகளைக் கூலிக்கு அமர்த்தி இவர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் நவீன கணணி மடிக்கணினி உட்பட நவீன தொடர்பாடல் சாதனங்களை பயன்படுத்தி இவர்கள் செய்யும் தொழில் பற்றிய விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இவர்களின் தொடர்பாடல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இலங்கையில் இணைய வழி மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் இவர்கள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்களா? என அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
(Visited 24 times, 1 visits today)