செய்தி

பாகிஸ்தானில் ஆபத்தில் இருக்கும் 45 மில்லியன் குழந்தைகள் : பொய் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் போராளிகள்!

போலியோ நோயிலிருந்து 45 மில்லியன் குழந்தைகளைப் பாதுகாக்க பாகிஸ்தான் நாடு தழுவிய தடுப்பூசி பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

ஆனால் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அவர்களைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட காவல்துறையினரை குறிவைத்து வன்முறை தாக்குதல்கள் இடம்பெறுவதும் வழமையான ஒன்றாக மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில் தடுப்பூசி பிரச்சாரங்கள் குழந்தைகளை கருத்தடை செய்வதற்கான மேற்கத்திய சதி என்று போராளிகள் பொய்யாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

வீடு வீடாகச் செல்லும் பிரச்சாரத்தின் போது, ​​5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு, அவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வைட்டமின் ஏ சப்ளிமெண்ட்ஸ் சொட்டுகள் வழங்கப்படும்.

பிரதம மந்திரி ஷேபாஸ் ஷெரீப் சமீபத்தில் முன்னணி சுகாதார ஊழியர்களை சந்தித்து, வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடாமல் குழந்தைகளை விட்டுவிடக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!