இலங்கை

இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் 410 வைத்தியசாலைகள் பாதிப்பு

டிட்வா சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் இலங்கையில் 410 வைத்தியசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் அதிகபட்ச சேதங்கள் மஹியங்கனை ஆதார வைத்தியசாலை மற்றும் சிலாபம் மாவட்ட வைத்தியசாலைக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க,

நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக 500க்கும் மேற்பட்ட சுகாதார நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட சுகாதார நிறுவனங்களை மீண்டும் வழமைக்குக் கொண்டுவர மேலும் கால அவகாசம் எடுக்கும் எனக் கூறியுள்ளார்.

சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி கருத்து வெளியிடுகையில்,

அனர்த்த நிலைமை காரணமாக 53 வைத்தியசாலைகளில் உள்ள உபகரணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மஹியங்கனை வைத்தியசாலை மற்றும் சிலாபம் வைத்தியசாலை ஆகிய இரண்டிலும், அந்த நேரத்தில் ஊழியர்கள் எடுத்துச் செல்ல முடிந்த அனைத்து உபகரணங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

குறிப்பாக, மஹியங்கனையில் நிறைய உபகரணங்கள் – அதாவது சில இயந்திரங்களில் கழற்றக்கூடிய பாகங்களை எடுத்து மேலே கொண்டு சென்றுள்ளனர்.

பெரிதும் சேதமடைந்தவை மூன்று உள்ளன. ஒன்று சிலாபம் வைத்தியசாலை, மற்றொன்று மஹியங்கனை, மற்றொன்று வத்தேகம. அதில் பெரிய சேதங்கள் இல்லை. கட்டிடங்களில் சேதமடைந்தவை 236 ஆகும். அதாவது, உபகரணங்களில் சேதம் உள்ளவை 53 ஆகும். அது குறித்த மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் கூறினார்.

TK

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!