இத்தாலியில் கப்பல் விபத்துக்குள்ளானதில் 41 பேர் உயிரிழப்பு!

இத்தாலிய தீவான லம்பேடுசாவில் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானதில் 41 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துனிசியாவில் உள்ள ஸ்ஃபாக்ஸில் இருந்து புறப்பட்ட ஒரு படகு இத்தாலிக்கு செல்லும் வழியில் கடலில் மூழ்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வட ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு இந்த வருடத்தில் இதுவரை 1,800 பேர் உயிரிழந்துள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)